சனி, 28 மார்ச், 2009

PHP Developer கள் தேவை

இரண்டு ஆண்டு அனுபவமுள்ள PHP Developer கள் தேவை.

தேர்ந்து எடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் 15,000௦௦௦/- சம்பளம் கொடுக்கப்படும்.

அவர்கள் ஆறு மாதத்திற்கு பிறகு வேலை நிரந்தரம் செய்ய படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் support@technosolutions.in என்ற ஈமெயில் முகவரிக்கு உங்களது resume யை அனுப்பவும் .

வியாழன், 12 மார்ச், 2009

என் கிரிவல அனுபவம்


நான் ஒரு சிவ பக்தன் . நான் திருவண்ணா மலை கிரிவல பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் . பௌர்ணமி அன்று 14 கிலோமீட்டர் கிரி வலம் வர வேண்டும்.

நான் பொதுவாக உடலை வருத்தி இறைவனை தொழுவதில் அதிக நம்பிக்கை இல்லாதவன் . கோவிலுக்கு சென்று இறைவனை கும்பிடுவதில் மட்டுமே போதும் என்பது என் பக்தியின் எல்லை .

என் நண்பர்கள் முடிந்த போதெல்லாம் கிரிவலம் செல்வது வழக்கம் . அவர்கள் மொத்தம் 15 முதல் 20 பேர் வரை இருப்பார்கள்.அவர்கள் ஒரு van யை வாடகைக்கு எடுத்து செல்வார்கள் . ஒவ்வொரு முறையும் என்னை அழைக்க மறக்க மாட்டார்கள். நானும் வழக்கம் போல மறுத்து விடுவேன்.

ஒரு பொர்ணமி அன்று என் நண்பர்கள் கிரிவலம் போக முடிவு செய்தார்கள் . அன்று வழக்கத்தை விட நிறைய பேர் வந்தனர். அவர்கள் வாடகைக்கு எடுத்த van மட்டும் போதாது அதனால் என்னிடம் என்னுடைய கார் தர முடியுமா என்று கேட்டார்கள் ?. நான் கிரிவலம் செல்வதற்கு தானே சந்தோஷமாக தருகிறேன் என்றேன். ஆனால் கார் ஓட்டுவதற்கு டிரைவர் கிடைக்க வில்லை. அதனால் நானே காரை வோட்டி செல்வது என முடிவு செய்தேன் . நீங்கள் செல்லும் கிரிவலம் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறேன். என்று அவர்களுடன் புறப்பட்டேன்.
நானும் வந்ததால் என்னுடைய நண்பர்கள் சந்தோஷம் அடைந்தனர்.

நாங்கள் கோவிலை அடையும் பொது இரவு 1.15 மணி . லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவில் முன் பெரிய அளவில் கற்பூரம் ஏற்ற பட்டிருந்தது. அனைவரும் அந்த தீபத்தை தொழுது தான் கிரிவலம் நடக்க ஆரம்பிப்பார்கள்.

அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது . நான் அந்து பெரிய கற்பூர தீபத்தின் முன் கண்ணை முடிகொண்டு ஈஸ்வரனை வேண்டிக்கொண்டேன். அந்த சமயம் பலமாக மழை பொழிய ஆரம்பித்தது (அதுவரை மழை பொழியும் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை ). மழை ஜோராக பொழிந்தது.எல்லாரும் அங்கிருந்து கடைகளுக்கு ஒதிங்கினர் . நாங்கள் கிட்ட தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக மழை நிற்க காத்திருந்தோம். ஆனால் மழை நின்ற பாடில்லை .

எனது நண்பன் சொன்னான் மழையிலே நடக்கலாமா என்று , நானும் சம்மதித்தேன். நாங்கள் மழையில் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் 2 1/2 மணி நேரத்தில் கிரிவலம் வந்தோம். அந்த நேரம் முழுவதும் பலமாகவும் , கொஞ்சம் மிதமாகவும் மழை பொழிந்து கொண்டே இருந்தது ஆனால் மழை நிற்க வில்லை . நாங்கள் கிரிவலம் முடித்தவுடன் மழையும் நின்று விட்டது.

என்னுடைய நண்பன் இதற்கு முன் பலமுறை கிரிவலம் வந்திருக்கிறான் . ஆனால் இதை போன்று ஒரு அனுபவம் அவனுக்கு கிடைக்க வில்லை என்றான். நானும் இதற்கு பிறகு பல முறை கிரிவலம் சென்றேன் ஆனால் இது போல் அனுபவம் கிடைக்க வில்லை .

இந்த நிகழ்வு எனக்கு மறக்க முடியாத அனுபவம் ஆகும் .

வெள்ளி, 6 மார்ச், 2009

வச்சுடாண்டா ஆப்பு


jobs
Originally uploaded by rajiprem72



அமெரிக்காவில் அடுத்த 7 ஆண்டுகளில் 5 லட்சம் நர்சுகள் தேவை படுவார்கள்.

இதை பற்றி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில்.

"நாம் வெளி நாடுகளில் இருந்து வேளைக்கு ஆள் எடுப்பது என்பது அர்த்தமற்றது . அதற்கு பதிலாக அமெரிக்கர்களுக்கு நர்ஸ் பயிற்சி வழங்க வேண்டும் " என்றார்

இது நாள் வரை இந்திய ,சீனா மற்றும் பிலிபின்ஸ் போன்ற நாடுகளில் இருந்து நர்ஸ் வேளைக்கு ஆட்களை எடுத்து கொண்டிருந்தார்கள் .

இனி மேல் இந்தியாவை சேர்த்த நர்சுகளுக்கு அமெரிக்க வேலை என்பது கனவாகி விடும்.

வியாழன், 5 மார்ச், 2009

வெற்றி கூட்டணி எது ?


Elections
Originally uploaded by rajiprem72

தேர்தல் வர போகிறது . யார் எந்த கூட்டணியில் இருபார்கள் என்று யாருக்கும் தேர்தல் வரை சொல்ல முடியாது.

அதனால் நாம் நம் யூகத்தை இப்போது சொல்லி வைக்கிறோம் . தேர்தல் அன்று சரி பார்த்து கொள்ளலாம் .

இதோ என்னுடைய யூகம்

கூட்டணி ஒன்று
திமுக , பாமக மற்றும் காங்கிரஸ்

கூட்டணி இரண்டு
ஆதிமுக ,கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக

பாஜக மற்றும் விஜயகாந்தின் கட்சி தனித்து போட்டியிடும்

நீங்கள் உங்கள் கூட்டணி யூகத்தை கமெண்ட் யில் சொல்லுங்க . தேர்தல் நேரத்தில் பார்போம்.

செவ்வாய், 3 மார்ச், 2009

என் கேள்விக்கு என்ன பதில் ? -Part 2


Puzzle, Riddle
Originally uploaded by rajiprem72

மேல உள்ள படத்தை பாருங்கள் . உங்களுக்கு விடை தெரிகிறதா ?

தெரியுமானால் , comment section யில் சொல்லுங்களேன் .

வெகுமதி ஒன்றும் இல்லை , வெறும் பாராட்டு மட்டும் தான்.

விடை சில நாட்களில் தெரிவிக்கிறேன் .

என் கேள்விக்கு என்ன பதில் ?


Puzzle
Originally uploaded by rajiprem72

மேல உள்ள படத்தை பாருங்கள் . உங்களுக்கு விடை தெரிகிறதா ?

தெரியுமானால் , comment section யில் சொல்லுங்களேன் .

வெகுமதி ஒன்றும் இல்லை , வெறும் பாராட்டு மட்டும் தான்.

விடை சில நாட்களில் தெரிவிக்கிறேன் .

Idea விற்பனைக்கு


Webmail 2 GMail
Originally uploaded by rajiprem72

நான் என்னுடைய வெப்சைட் Techno Solutions domain space வாங்கும் பொது எனக்கு 2 ஈமெயில் id தந்தார்கள்.

எனக்கு கிடைத்த வெப் space 25MB ஆகும். எனக்கு 10 ஈமெயில் வந்தால் என்னுடைய webspace நிறைந்து விடும் . அதற்கு மேல் வரும் ஈமெயில் bounce ஆக தொடங்கும்.

அதனால் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது .நான் பழையப்படி எனது பர்சனல் ஈமெயில் id தர வேண்டிய நிலையிக்கு தள்ள பட்டேன் .

இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தேன் .

இப்போது என்னுடைய ஈமெயில் id யை கூகிள் லில் இணைத்து விட்டேன் . இப்போது எனக்கு 7 GB வெப் space உள்ளது . எனக்கு 50 ஈமெயில் id வைத்து கொள்ள முடியும்.
என்னுடைய ஈமெயில் id மற்ற வேண்டிய அவசியம் இல்லை.இந்த எல்லா வசதிகளும் கூகிள் இலவசமாக தருகிறது .

நான் இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளேன் . உங்களுக்கும் என்னை போல official மெயில் id உள்ளதா ? உங்களுக்கும் 7 GB web space வேண்டுமா ?

அப்படியானால் நீங்கள் என்னுடைய PAYPAL account யிற்கு 20 USD அளிக்கவேண்டும்.

கீழ் கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.





WebMail to GMail Software -Price Tag







நீங்கள் prem@technosolutions.in என்ற என் ஈமெயில் id யிக்கு தொடர்ப்பு கொள்ளுங்கள் .

நான் அந்த Idea வை உங்கள் ஈமெயில் id யிக் அனுப்பி வைக்கிறேன்.

நீங்கள் உலகம் சுற்றும் வாலிபனா ?


உலகம் சுற்றும் வாலிபன்
Originally uploaded by rajiprem72

நீங்கள் வேலை நிமித்தம் உலகை சுற்றுபவர்களா ?. அப்படியானால் கீழ் காணும் தகவல் உங்களுக்கு பயன் பெரும்.

Hospitality Club இந்த வெப்சைட் உங்களுக்கு பயன் தரும்.

இதில் 207 நாடுகளை சேர்ந்த 3,30,000 உறுபினர்கள் உள்ளனர் .

ஒரு உதரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்து பிரான்ஸ் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம் .

நீங்கள் இந்த வெப்சைட் யை பயன்படுத்தி பிரான்ஸ் யில் உள்ள உறுப்பினர்களை கண்டறியலாம் . நீங்கள் வேண்டுமானால் அவர்கள் வீட்டில் paying guest ஆக தங்கலாம் .

அவர்கள் உங்களை பிரான்ஸ் சுற்றி பார்க்க உதவுவார்கள்.

உங்களுக்கு அந்த ஊரில் ஒரு சொந்தம் இருப்பது போல தோன்றும் .

207 நாடுகளில் எந்த நாடுக்கும் நீங்கள் இந்த வசதியை பயன் படுத்தலாம் .

இந்த வெப்சைட் நல்ல மனம் படைத்த சிலரால் நடத்த படுகிறது .இதில் சேருவது இலவசம்.

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரான்ஸ்யில் இருந்து ஒரு நபர் இந்தியாவிற்கு வந்தார் . நான் அவரை சென்னை சுற்றி பார்க்க கூடே சென்றேன். அது ஒரு நல்ல அனுபவம்.

இந்த வெப்சைட் பார்க்கும் போது ஒரு பழ மொழி ஞாபகம் வருகிறது .

யாதும் ஊரே , யாவரும் கேளிர் .

இலவச கலர் டிவி


Free TV
Originally uploaded by rajiprem72

நரேந்திர மோடி குஜராதின் மூன்றாம் முறையாக முதல்வராக போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க காங்கிரஸ் பல தந்திரங்களை கையாண்டது .

காங்கிரஸ் வென்றே தீரவேண்டும் என்பதால் "நங்கள் ஜெயித்து வந்தால் அனைவர்க்கும் கலர் டிவி தருவோம்" என்று அறிவித்தனர் . (ஐடியா உபகாரம் DMK வ ???)

இந்த பிரசாரம் குஜராத் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

நரேந்திர மோடி தேர்தலில் தோற்பார் என்று எதிர்பார்க்க பட்டது.

இந்த அறிவிப்பு வந்த பிறகு நரேந்திர மோடி கலந்து கொண்ட முதல் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது . அவர் பல சலூகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது .

அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் இலவச டிவி பற்றி கேட்டனர். நீங்கள் என்ன செய்ய போகறீர்கள் என்று கேட்டனர் .

அதற்கு நரேந்திர மோடி " நான் ஜெயித்து வந்தால் வரி தராதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுப்பேன் . எனக்கு பணம் இருந்தால் தான் என் மாநிலத்தில் எதாவது நல்ல காரியம் செய்யமுடியும் அதனால் என்னால் ஒன்றும் இலவசமாக ஒன்றும் தரமுடியாது " என்று திட்டவட்டமாக கூறினார்.

அவர் அந்த தேர்தலை அமோகமாக வென்றார் . இன்று அனைவரும் வியக்கும் படி ஆட்சி செய்கிறார் .

அங்கே 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது. அணைத்து துறையிலும் முன்னேற்றம் காண முடிகிறது.

ஆனால் தமிழனோ கலர் டிவி யிக்கு ஆசை பட்டு vote அளித்து இன்று மின்சாரம் இல்லாது தவிக்கிறான் .

நாம் இலவசங்களை மறந்து , நமக்கு நன்மை செய்யும் அரசை தேர்வு செய்வோம்.

ஜெய் ஹிந்த்

ஜாக்கிரதை


dollar
Originally uploaded by rajiprem72

நான் ஆன்லைன் உலகத்தில் கிட்டதட்ட 13 ஆண்டுகளாக இருக்கிறேன். எனது ஈமெயில் ID யிக்கு பல லட்சம் ரூபாய் லாட்டரி விழுந்திருப்பதாக ஓராயிரம் ஈமெயில் எனக்கு வந்திருக்கிறது.

இந்த Blog அதை பற்றி அல்ல.

நேற்று என் மொபைல்யிக்கு ஒரு sms வந்தது .அதன் மெசேஜ் ..

YOUR MOBILE NO HAS WON USD250,000.00 IN 2009 CFCS ANNUAL MOBILE DRAW, TO CLAIM YOUR PRICE SEND YOUR NAME ,AGE,TEL & ADDRESS TO EMAI:cfs4@cooltoad.com

ஈஸ்வரா , இது போன்று எதனை sms வர போகிறதோ ?

அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள் , அதிக பணத்திருக்கு ஆசை பட்டு உள்ளதையும் இழக்காதீர்கள் .

நன்றி

திங்கள், 2 மார்ச், 2009

Idea விற்பனைக்கு


idea selling
Originally uploaded by rajiprem72

நாம் படிப்பதற்கு நிறைய புத்தகங்களை வாங்குகிறோம்

அவற்றை இலவசமாக ஆன்லைன் யில் படிக்க வேண்டுமா ?

கீழ் காணும் ஆங்கில பிரதிகளை இலவசமாக படிக்கச் வேண்டுமா ?

Health & Wellness,Saveur,Popular Photography,Men;s Health,Kiplinger's,Popular Mechanices,VIV Mag,CAR and Driver,PC World,ELLE,Technology Review,Outside ,Macworld,Esquire,NME,Mac World,Lonely Planet,Reader's Digest,Black Book,Foreign Policy,iPhone Life.

இதை ஒரு புத்தகத்தை வாசிப்பது போல ஆன்லைன் யில் வாசிக்கலாம்.

அப்படியானால் கீழ் காணும் PAYPAL அக்கௌன்ட் பட்டனை கிளிக் செய்யவும். எனக்கு நீங்கள் 2 US டாலர் தரவேண்டும்.








பணம் செலுத்திய பின் எனக்கு prem@technosolutions.in என்ற என் ஈமெயில் ID இக்கு மெயில் செய்யவும் .

நான் உங்களுக்கு மேல் காணும் ஆங்கில நாளேடுகளை எப்படி ஆன்லைன் யில் இலவசமாக படிப்பது என்று சொல்லுகிறேன்.

சாய் பாபாவும் நானும் -பகுதி 3


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

என்னுடைய நண்பன் ஒரு தீவிர சாய் பாபா பக்தன் . அவனுடைய தொழில் நிறுவனத்தின் பெயர் மற்றும் அவனுடைய மகளின் பெயர் ஆகியவற்றில் சாய் பாபா பெயர் இடம் பெற்று இருக்கும் . அந்த அளவு சாய் பாபா பக்தி உள்ளவன்.அவனக்கு என்னுடைய சாய் பாபா அனுபவங்களை சொல்லியிருக்கிறேன்.

ஒரு நாள் அவன் என்னுடைய வீட்டிற்கு வந்தான். " நான் ஷிர்டி செல்கிறேன் என்னுடன் வருகிறாயா ? " என்று கேட்டான் .

நான் வழக்கம் போல " நான் மனிதர்களை , மகான்களை கும்பிடுவதில்லை" அதனால் நான் அவனுடன் செல்ல மறுத்து விட்டேன்.

அவன் போய் வரும் செலவு வரை அவனே பார்த்து கொள்கிறேன் என்று சொன்னான்.

நான் அவன் சொன்னதை எல்லாம் தட்டி கழிக்கவே அவன் சாபம் இட்டான்.

"நீ ஷிர்தி செல்வாய் ஆனால் நீ சாய் பாபாவை காண முடியாது " என்று சொல்லி நடையை கட்டினான்.

இந்த சம்பவம் நடந்து பல மதங்கள் ஓடின.

உங்களுக்கு எல்லாருக்கும் குஜராத் பூகம்ப சம்பம்வம் ஞயாபகம் இருக்கும் என நம்புகிறேன். நான் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஒரு ஊறுப்பினர் ஆவேன். நாங்கள் ஒரு லாரியில் உணவு பொருட்கள் மற்றும் மருத்துகள் (கிட்டதட்ட 15 டன் உதவி பொருட்களுடன்) சென்றோம் .

நாங்கள் தரை வழி மார்கமாக குஜராத் சென்றோம். குஜராத் செல்ல 7 நாட்கள் தேவை . ஒரு நாள் நாங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை கடந்து இருக்கும் பொது எங்கள் லாரி சிக்னல் கிடைக்கவில்லை என்று சாலையில் காத்து கொண்டிருந்தது . அந்த இடத்தில எங்கு பார்த்தாலும் காவி கொடி பறந்து கொண்டிருந்தது. நான் எங்கள் லாரி டிரைவர் யை பார்த்து கேட்டேன் . நாம் இருக்கும் இடத்திற்கு என்ன பெயர் என்று . அவர் சொன்னார்

"நாம் இருக்கும் இடம் சாய் பாபா கோவில் அமைந்துள்ள ஷிர்டி என்றார்".

எனக்கு கோவிலின் கோபுரம் காண முடிந்தது .நான் டிரைவர் இடம் நான் போய் கோவிலை பார்த்துவிட்டு வரட்டுமா என்றேன். ?

அதற்கு அவர் சிக்னல் எப்போது வேண்டுமானாலும் கிடக்கலாம், அதனால் நாம் காத்திருக்க முடியாது என்றார். எனக்கு நல்ல நினைவிருக்கிறது நாங்கள் அந்த இடத்தில் அரை மணி நேரம் மேல் காத்திருந்தோம். இருந்தாலும் என்னால் கோவிலுக்கு செல்ல முடிய வில்லை.

இது என்னுடைய நண்பனின் சாபமாக இருக்குமோ ?ஒன்றும் புரிவயில்லை.

இருந்தாலும் எனக்கு இப்படி ஒரு அனுபவம்.

இந்த சம்பவத்தை என்னுடைய நண்பனுக்கு சொன்னேன்.அவன் மிகவும் வருந்தினான் .

சாய் பாபாவும் நானும் - பகுதி 2


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

நாங்கள் ஒரு பிளாட்டில் வசிக்கிறோம் . மொத்தம் ஆறு வீடுகள் உள்ளன . ஒவ்வொரு தளத்திலும் இரண்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடி. இரண்டாம் மாடியில் இருப்பவர்கள் சாய் பாபாவின் தீவிர பக்தர்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் உள்ள ஷிர்திக்கு செல்வது வழக்கம் .

சாய் பாபாவுடன் ஆனா என்னுடைய அனுபவத்திற்கு வருவோம்.

ஒரு நாள் எனக்கு ஒரு கனவு. நான் வாக்கிங் போவதற்காக மொட்டை மாடிக்கு போய் கொண்டிருக்கிறேன். (பொதுவாக நான் வாக்கிங் போவது எங்கள் மொட்டை மாடியில் தான் .நிலா வெளிச்த்தில் நடப்பது தனி சுகம் ). நான் மாடிக்கு போகும் போது யாரோ அங்கு படுத்திருந்தார்கள் (நான் கனவை பற்றி சொல்லிவருகிறேன்). அவர் ஒரு வயதானவர் போல் தோன்றினார்.

நான் அங்கு படுத்துதிருந்தவரை பார்த்து

"யார் நீங்கள் ? எங்கள் மொட்டை மாடியில் வந்து படுத்து இருக்குறீர்களே என்று கேட்டேன்.

அதற்கு அவர்
"நான் ஒரு வயோதிகன் , நான் மாடி படி ஏறி வந்ததால் கலைத்து போய்விட்டேன் என்றார்".

நான் கேட்டேன்

"நீங்கள் யார் ?,இங்கு ஏன் வந்தீர்கள் ?"

அதற்கு அவர் என்னை உனக்கு தெரியவில்லையா என்று கேட்டார் ?

நான் சற்று உற்று பார்தேன். அவர் பார்ப்பதற்கு சாய் பாபா போல் காட்சி அளித்தார் .

நான் "நீங்கள் சாய் பாபாவ" என்றேன்

அதற்கு அவர் ஆமாம் என்று தலை அசைத்தார் .

நான் "நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டேன்.

அவர் "நான் இரண்டாம் தளத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு வந்தேன் " என்றார்.

நான் " அப்படியானால் அவர்கள் வீட்டுக்கு போகாமல் மாடி வரை வரவேண்டிய கரணம் என்ன " என்று

அவர் ." நான் எப்போடியோ இங்கு வந்து விட்டேன் . எனக்கு ஒரு உதவி செய்வாயா " என்று கேட்டார்.

நான் "சொல்லுங்கள் என்னால் முடிந்தால் செய்கிறேன் என்று "

அவர் " அந்த இரண்டாம் மாடி வீட்டில் உள்ளவர்களிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா " என்று கேட்டார்.

உடனே என் கனவு கலைந்தது .

என்னால் ஒன்றும் நம்ப முடியவில்லை. நான் காலை எழுந்தவுடன் அவர்களிடம் எதை சொல்லலாமா சொல்லவேண்டாமா என்று பல முறை யோசித்தேன். இந்த அறிவியல் காலத்தில் இந்த கனவை எப்படி எடுத்து கொள்வார்களோ என்று நினைத்தேன்.

என்ன நினைத்தால் என்ன என்று எண்ணி அவர்கள் கதவை தட்டினேன் . அவர்களிடம் என் கனவை பற்றி கூறினேன். என் கனவை பற்றி சொல்லி முடிந்தவுடன் அவர்கள் அனைவரம் அழ தொடங்கி விட்டார்கள். நாங்கள் சாய் பாபாவை பல ஆண்டுகளாக வழிபடுகிறோம் ஆனால் இது வரை அவர் எங்கள் கனவுகளில் வந்தது இல்லை .நீ பாகியம் செய்தவன் என்று சொன்னார்கள்.

இன்று எங்கள் மொட்டை மாடியில் சாய் பாபாவிற்கு ஒரு கோவில் உள்ளது . மேல் வீட்டார்கள் செய்தது.

இதுவும் ஒரு இனிய அனுபவம் தான்.

அடுத்த சாய் பாபா அனுபவம் அடுத்த ப்ளோகில்.

சாய் பாபாவும் நானும் - பகுதி 1


shirdi_sai_baba
Originally uploaded by rajiprem72

நான் சாய் பாபா பக்தன் அல்ல .நான் ஒரு நாத்திகனும் அல்ல.

ஆனால் சாய் பாபாவால் என் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்சிகளை இங்கே எழுதிகிறேன்.

நான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு விடுமுறையில் ஒரு மாதா காலம் வேலைக்கு போயிருந்தேன். அது ஒரு மார்க்கெட்டிங் வேலை.

ஒரு நாள் காலை நானும் என்னுடைய மேல் அதிகாரியும் மௌன்ட் ரோட்டில் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் துண்டு சீட்டு பிரசுரம் செய்து வந்தார். எனக்கும் ஒரு நோட்டீஸ் கிடைத்தது . அது சாய் பாபாவை பற்றிய பிரசுரம் ஆகும். எனக்கு நோட்டீஸ் தந்தவர் என்னை சாய் பாபா கோவிலுக்கு அவசியம் வரவேண்டும் என்று கேட்டு கொண்டார்.

நான் சொன்னேன்
"நான் ஒரு சிவ பக்தன் நான் மனிதர்களை , மகான்களை கும்பிடுவதில்லை" . அதனால் என்னை மன்னிக்கவும் எனக்கு சாய் பாபா கோவிலுக்கு வர மனம் இல்லை என்று சொன்னேன்.

நோட்டீஸ் தந்தவர் சொன்னார்
"சார் நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி நீங்கள் இன்று சாய் பாபா கோவிலுக்கு வருவீர்கள்" என்றார் .

எனக்கு சிரிப்பு வந்தது நான் விரும்பாமல் எப்படி சாய் பாபா கோவிலுக்கு செல்வேன் . எனக்கு சென்னையில் சாய் பாபா கோவில் எங்கிருக்கிறது என்றே தெரியாது.

அன்றைய நாள் நானும் என்னுடைய மேல் அதிகாரியும் பல இடங்களுக்கும் சென்றோம் . ஒன்றாக மதிய உணவு உண்டோம்.

அன்றைய பொழது மிகவும் கலைத்து போய்விட்டேன். மாலை ஒரு நான்கு மணி இருக்கும் என்னுடைய மேல் அதிகாரியின் மனைவி போனில் அவர் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் இன்று கேட்டு கொண்டார். நங்கள் இருவரும் சென்றோம்.

அந்த இடத்திற்கு நாங்கள் முதல் முறையாக செல்வதால் நாங்கள் தெரு தெருவாக சுற்றினோம் . அப்போது நான் ஒரு பிள்ளையார் சிலையை கண்டேன். நிறைய பக்தர்கள் வணங்கி கொண்டிருந்தார்கள். அன்று ஒரு வியாழ கிழமை . நான் அங்கு இருந்தவர்களை கேட்டேன் இது என்ன கோவில் என்று. அவர்கள் சொன்னார்கள் இது சாய் பாபா கோவில் என்று.

நான் திகைத்து போய் விட்டேன். என்னால் காலையில் நடந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை .அந்த நோட்டீஸ் தந்தவர் சொன்ன வாக்கியம் .

அவர் சொன்னது போல நான் சாய் பாபா கோவில் முன் நிற்கிறேன் .

இந்த அனுபவத்தை என்ன என்று சொல்ல்வது.

எனது சாய் பாபா அனுபவங்கள் தொடரும் .

தமிழ் மற்றும் ஆங்கிலம் வார்த்தைகளின் வினோத ஒற்றுமை.


TAMIL
Originally uploaded by rajiprem72

ஆங்கிலத்தில் உள்ள WAR மற்றும் POUR என்ற இரண்டு வார்த்தைகளை பாருங்கள்.

ஆங்கிலத்தில் WAR என்றால் தமிழில் போர் .

ஆங்கிலத்தில் POUR என்றால் தமிழில் வார் (அதாவது எனது வயிற்றில் பாலை வார்த்தாய் என்று பொருள் )

தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் WAR

தமிழில் வார் என்றால் ஆங்கிலத்தில் POUR

பார்த்தீர்களா தமிழ் மற்றும் ஆங்கிலம் வார்த்தைகளின் வினோத ஒற்றுமை.

ஞாயிறு, 1 மார்ச், 2009

லஞ்சம் ஒழிபோம்


stop corruption
Originally uploaded by rajiprem72

நம் தாய் நாட்டில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அதை நாம் ஒழிக்க ஒன்று சேர வேண்டும்.

உங்கள் கண் முன்னால் யாராவது லஞ்சம் வாங்கினால் . நீங்கள் கீழ் காணும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கவும்.

94440 77666,
94441 13058,
98400 82626,
98401 10906,
98409 23007,
94444 56024,
94441 70279,
93810 02009,
98406 18948,
044-2723 7139


மேலும் கீழ் காணும் வெப் சைட் கிளிக் செய்யவும்.

5thPillar


நம்மால் இயன்ற செயலை செய்வோம்

ஜெய் ஹிந்த்